
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி, டெல்லியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும், ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், டெல்லியில் இன்று போராட்டம் தொடரப்பட்டது. இரவு 8 மணி வரை நடைபெறும் இந்தப் போராட்டத்தில், மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ, எம்பிக்கள் மற்றும் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் போராட்டத்திற்கு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை சந்தித்து சந்திரபாபுநாயுடு மனு அளிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வரும் மேடையில் பேசிய ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, "நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் என்மீது தேவையற்ற தனிமனித தாக்குதலில் பிரதமர் மோடி ஈடுபடுவதாகவும், அதற்கு செலவிடும் நேரம் மற்றும் முயற்சியில் சிறதளவைக் கூட ஆந்திர மாநில வளர்ச்சிக்கு செலவிடவில்லை" என்றும் குற்றம் சாட்டியுள்ளார்